Wednesday 1 June 2011

வித்தியாசமான கதாபாத்திரங்களை விரும்பி ஏற்பதில் கமலையும் பின்னுக்கு/**/த் தள்ளிவிடுவார் சூர்யா.

இவர் நடிக்கும் "மாற்றான்" படத்தில் இவரது கதாபாத்திரம் தான் இப்படி சொல்ல வைத்திருக்கிறது.

கே.வி.ஆனந்த் இயக்கும் இந்தப் படத்தில் ஒட்டிப் பிறந்த இரட்டையர்களாக சூர்யா நடிக்கிறார். இப்படி ஒட்டிப் பிறந்த குழந்தைகளை அறுவை சிகி/**/ச்சை மூலம் பி/**/ரித்தால் இரு குழந்தைகளுமே மரணமடைய நேரும். அதனால் அப்படியே விட்டுவிடுவார்கள். அவர்கள் வளர்ந்த பிறகும் ஒட்டியே இருப்பார்கள். நடப்பது முதல் படுப்பது வரை அனைத்துமே சிரமம்.

இதனை மையமாக வைத்து மலையாளத்தில் ஒரு திரைப்படம் வெளிவந்தது. அதில் ஒட்டிப் பிறந்தவர்களாக இரு வேறு நடிகர்கள் நடித்தனர். மாற்றானில் இந்த இரு வேடத்திலும் சூர்யாவே நடிக்கிறாராம்.

No comments:

Post a Comment